தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

 மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா

படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் ஜெயங்கொண்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.
அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கத்தோடு அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜெயங்கொண்டம் க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரியில் பிப்ரவரி மாதம் 03 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. இந்த முகாமில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கோவை, கருர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. எனவே 18 வயதிற்கு மேற்பட்ட 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டபடிப்பு பயின்றவர்கள் வரை அனைவரும் உரிய ஆவணங்களுடன் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தகவல் தரப்பட்டுள்ளது.

Tags

Next Story