தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள்

தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம்

அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டத்தில் நடந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 205 பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கத்தோடு அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜெயங்கொண்டம் க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரியில் நடைப்பெற்றது. இதில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன், அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா, மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கோவை, கருர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்தனர். அதன்படி 784 பேர் கலந்து கொண்ட இந்த முகாமில் 205 பேருக்கு உடனடியாக பணி நியமனத்திற்கான ஆணைகள் வழங்கபட்டது. இதில் திருச்சி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குனர் உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகள் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story