திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் !

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் !

 வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 21-ந் தேதி நடைபெறவுள்ளது.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். 21-ந் தேதி நடக்கிறது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்தூராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது- திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 24-ம் தேதி காலை 10:30 மணி அளவில் 4-ம் தளத்தில் அறை எண்- 439ல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருப்பூர் என்ற முகவரியில் நடைபெறும். தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தனியார் துறை வேலைவாய்ப்பளிப்பவர்கள் கலந்துகொண்டு வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய வருகை தர உள்ளனர். முகாமில் வேலை தேடுபவர்கள் தங்கள் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம்.வேலையளிப்போரும் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. எழுதப் படிக்க தெரிந்தவர்கள் முதல் முதல் நிலை பட்டதாரிகள் வரை ஐடிஐ டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் வேலை தேடுபவர்களும்,வேலையளிப்போhttp://www.tnprivatejobs.tn.gov.inரும் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள தெரிவித்துள்ளனர்.முகாமுக்கு வருபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் அனைவரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும்போது புதிய பதிவு மற்றும் பதிவு புதுப்பித்தல் செய்து கொள்ளலாம்.மேலும் தகுதி யுடையவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம். தனியார் துறைகளில் வேலையில் சேர்வதால் தங்கள் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story