சேலத்தில், 16-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலத்தில், 16-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

 ஆட்சியர் பிருந்தா தேவி 

மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சேலத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16-ந் தேதி நடைபெறுவதாக ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்ட வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16-ந் தேதி சேலம் கோரிமேடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.

முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இம்முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை நாடுனர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறார்கள். மேலும், இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். பணிக்காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்ய உள்ள தொழில் நிறுவனங்களும், வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story