பிப்.14 ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

பிப்.14 ல்  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்

திருப்பத்தூரில் நடக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்துவதற்கு ஆணையரகத்தால் அறிவுறுத்தப்பட்டது. திருப்பத்துார் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு & தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 14_02_2024 அன்று ஜோலார்பேட்டை அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் (சிறு விளையாட்டு அரங்கம் அருகில்) நடத்துவதற்கு ஆணையரக கருத்துரை பெறப்பட்டுள்ளது. இம்முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னனி நிறுவனங்கள் பங்கு பெற உள்ளது. எனவே திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள எட்டாம் வகுப்பு முதல் பட்டய படிப்பு மற்றும் பொறியியல், மருத்துவம் சார்ந்த (Diploma & ITI) முடித்த ஆண்கள், பெண்கள் இம்முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story