ஆம்பூரில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

ஆம்பூரில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நடைப்பெற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு நேர்முக தேர்வில் தேர்வானவர்களுக்கு பணி ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட ஊரக ,

நகர்புற, வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைப்பெற்றது.. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 76 தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றனர்.

பின்னர் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்று பல்வேறு நிறுவனங்களில் பணிக்கு தேர்வானவர்களுக்கு பணி ஆணையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்..

Tags

Next Story