வேடசந்தூர் அருகே தனியார் சுற்றுலா பேருந்து விபத்து

வேடசந்தூர் அருகே தனியார் சுற்றுலா பேருந்து விபத்து

விபத்தில் சிக்கிய பஸ்

வேடசந்தூர் அருகே தனியார் சுற்றுலா பேருந்து விபத்துககுள்ளனது.

ஆந்திர மாநிலம் சித்துாரில் இருந்து தனியார் சுற்றுலா பஸ் நேற்று பழநிக்கு புறப்பட்டது. சித்தூர் போல் ரெட்டி பள்ளியை சேர்ந்த டிரைவர் மது 37, ஓட்டினார். திருத்தணி சென்றுவிட்டு இரவு 10:00 மணியளவில் வேடசந்தூர் ரங்கநாதபுரம் அருகே நெடுஞ்சாலையில் வந்த போது முன்புற பிளேட் உடைந்ததால் திண்டுக்கல் ரோட்டில் சென்ற பஸ் நிலைதடுமாறி சென்டர் மீடியனை தாண்டி கரூர் ரோட்டில் குறுக்காக நின்றது.

இதில் பஸ்ஸில் பயணித்த சங்கீதா 41, சந்தியா 35, சாந்தி 60, வந்தனா 38, அணு 13, ரேணுகா 65, ஆறு பேர் காயமடைந்தனர். கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story