சென்னை மாநகராட்சி கூட்டரங்கில் பரிசு வழங்கல்

சென்னை மாநகராட்சி கூட்டரங்கில் பரிசு வழங்கல்

பரிசு வழங்கிய ஆணையாளர்

சென்னை மாநகராட்சி கூட்டரங்கில் 100% வாக்களிப்பதுக் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற வினாடி வினா போட்டி வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாக கூட்டரங்கில், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள குடும்பத்தினரிடையே தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற தேர்தல் குறித்த வினாடி வினா போட்டி நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலரும் கூடுதல் தலைமைச் செயலாளரும் ஆணையாளருமான ராதாகிருஷ்ணன், தொடங்கி வைத்து,

தேர்தல் குறித்த கேள்விகளுக்கு சரியாகப் பதிலளித்தவர்களுக்கு பரிசினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) சுரேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story