பொதுத்தேர்வில் சிறப்பிடம்பெற்ற மாணவர்களுக்கு பரிசு

பொதுத்தேர்வில் சிறப்பிடம்பெற்ற மாணவர்களுக்கு பரிசு

கோவில்பட்டியில் பொதுத்தேர்வில் சிறப்பிடம்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


கோவில்பட்டியில் பொதுத்தேர்வில் சிறப்பிடம்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பொதுததேர்வில் சிறப்பிடம்பெற்ற மாணவரகோவில்பட்டியில் ஸ்ரீ நாராயணகுரு கல்வி வளர்ச்சிகுழு சார்பில் அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கோவில்பட்டி புதுக்கிராமம் ஆவுடையம்மாள் திருமண மண்டபத்தில் 10 மற்றும் 12ம்வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தலா ரூபாய்1000 வீதம் 31 மாணவர்களுக்கும், முதலிடம் பெற்றவருக்கு ரூபாய்5000 மற்றும் நினைவு பரிசும், 2ம் இடம்பெற்றவருக்கு ரூ 3000மற்றும் நினைவு பரிசும், 3ம் இடம் பெற்றவருக்கு ரூ 2000 மற்றும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு தலைவர் சங்கர் தலைமை வகித்தார். இன்ஜினியர் மாரிக்கண்ணன், மேனாள்சுகாதார ஆய்வாளர்கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஜோதிடர் அருணாசலம் அனைவரையும் வரவேற்றார். இதில் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் ஜான்கணேஷ், பாரதி அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், தமிழாசிரியர்கள் முருகசரஸ்வதி, சசிகலா ஆகியோர் சிறப்பிடம் மற்றும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினர். இதில் ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், ஆறுமுகம், தினேஷ் பாலாஜி, அருள் ஜெயராஜ், உள்பட மாணவர்கள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.உடற்கல்வி ஆசிரியர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

Tags

Next Story