சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு

சிவகாசியில் நடைப்பெற்ற சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே தமிழன் சிலம்பம் அகாடமி மற்றும் சேக்காய் சிலம்பம் அகாடமி இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி பரிசளிப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி பங்கேற்பு.சிவகாசி அருகே திருத்தங்கல் காமராஜர் அரங்கில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் வெற்றிவாகை சூடிய வீரர் வீராங்கனைகளுக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி வெற்றி பெற்ற வீரர்,வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுகள் தெரிவித்தார்.மேலும் இந்நிகழ்வின் போது கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story