நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி- ஆட்சியர் பங்கேற்பு

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி- ஆட்சியர் பங்கேற்பு

நலத்திட்ட உதவி 

செங்கல்பட்டு மாவட்டம் ஒரத்தி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத் கலந்து கொண்டு இலவச வீட்டு மனை பட்டா, இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கு நிதி உதவி, விலையில்லா தையல் இயந்திரம், பழச் செடிகள் தொகுப்பு, காதொலி கருவி, மூன்று சக்கர வாகனம், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி அருள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story