மாணவ மாணவியர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

மாணவ மாணவியர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி 
அருப்புக்கோட்டையில் 1,500 மாணவ மாணவியர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம்,அருப்புக்கோட்டை A.N.U.T மண்டபத்தில் ஸ்ரீ ஆதி பாலச்சந்திர விநாயகர் பக்தர்கள் குழு, J.P.R மீடியா மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் இணைந்து S.சிவசாமி குருநாதர் நினைவாக சுமார் 1,500 மாணவ மாணவியர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு தலைமை வகித்தார். இந்த கல்வி உபகரணங்கள் வழங்கும் கல்வித் திருவிழாவில் எல்கேஜி முதல் பிளஸ் டூ வரை உள்ள மாணவர்களுக்கு அவர்களின் வகுப்பு ஏற்றவாறு தனித்தனியாக நோட்டுப் புத்தகங்கள் பேனா பென்சில் ரப்பர் மற்றும் ஏனைய கல்வி உபகரணங்கள் தனித்தனியாக ஒரு தொகுப்பாக வழங்கப்பட்டது.

சுமார் 1500 ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் இலவச கல்வி உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. வருவாய் கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு மற்றும் ஸ்ரீ ஆதி பாலச்சந்திர விநாயகர் பக்தர்கள் குழு, J.P.R மீடியா மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் நிர்வாகிகள் இணைந்து கல்வி உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள், தொழிலதிபர்கள், நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.‌

Tags

Next Story