சேலத்தில் அதிமுக சார்பில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி

சேலத்தில் அதிமுக சார்பில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி

நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி 

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய பஸ் நிலையம் பகுதியில் நீர்மோர் பந்தல் நேற்று அமைக்கப்பட்டது. மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாஜலம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நீர் மோர், தர்பூசணி ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ., மாநகர அவைத் தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.செல்வராஜ், ரவிச்சந்திரன், மாநகர பொருளாளர் பங்க் எஸ்.வெங்கடாசலம், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஜான் கென்னடி, பகுதி செயலாளர்கள் சரவணன், யாதவ மூர்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story