பள்ளி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்; கடைக்கு சீல்

திருக்குவளையில் பள்ளி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்
நாகை மாவட்டம்திருக்குவளையில் பள்ளிக்கு மிக அருகாமையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மிக அருகாமையில் காருகுடியை சேர்த,பிரவீன்குமார் நடத்தி வரும் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்து வந்தது. இந்நிலையில் திடீரென உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடையில் அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடையில் விற்பனை செய்வது உறுதியானது‌. அதனைத் தொடர்ந்து திருக்குவளை காவல் உதவி ஆய்வாளர். மகாலட்சுமி முன்னிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Tags

Next Story