வாகனங்கள் செல்ல தடை - திருவேற்காடில் போராட்டம்.

வாகனங்கள் செல்ல தடை - திருவேற்காடில் போராட்டம்.

ஆர்ப்பாட்டம் 

திருவேற்காடு, சன்னிதி தெருவில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதை கண்டித்து குடியிருப்புவாசிகள், கடைக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவேற்காடு, சன்னிதி தெருவில் புகழ்பெற்ற தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களால், சன்னிதி தெருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சில நாட்களுக்கு முன், சன்னிதி தெருவில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல, கோவில் நிர்வாகம் தடை விதித்தது. இந்நிலையில் நேற்று, இருசக்கர வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டதால், பூமாலை, பூஜை சாமான் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள், குடியிருப்புவாசிகள் என, 100க்கும் மேற்பட்டோர், திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவேற்காடு போலீசார் வந்து, கோவில் நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்திய பின், பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags

Next Story