மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் !

மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் !

ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய பலி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் துல்கர்னை செட் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துல் முத்தலிப் முன்னிலை வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story