வாடியூரில் ரூ.91 லட்சத்தில் திட்டப் பணிகள் துவக்கம்

வாடியூரில் ரூ.91 லட்சத்தில் திட்டப் பணிகள் துவக்கம்
திட்டப் பணிகள் தொடக்கம்
வாடியூரில் ரூ.91 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் வாடியூா் ஊராட்சியில் பேவா் பிளாக் சாலை, வாருகால், குடிநீா் திட்டம் என ரூ. 91 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆலங்குளம் ஒன்றியக்குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் ஸ்நாபக அந்தோணி முன்னிலை வகித்தாா். எம்எல்ஏ பழனிநாடாா், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தனா். இந்நிகழ்ச்சியில், திமுக நிா்வாகிகள் சசிகுமாா், ஜேசுராஜன், தங்கம், ஊராட்சி செயலா் சாா்லஸ் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

Tags

Next Story