துணை தாசில்தார்கள் 8 பேருக்கு பதவி உயர்வு

துணை தாசில்தார்கள் 8 பேருக்கு பதவி உயர்வு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 துணை தாசில்தார்கள் பதவி உயர்வு பெற்று பல்வேறு இடங்களில் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வரும் 8 பேருக்கு தாசில்தாராக பதவி உயர்வு அளித்து அவர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கி, மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதன் படி விளாத்திகுளம் வட்ட வழங்கல் அலுவலர் ரத்னாசங்கர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக பறக்கும்படை தனி தாசில்தாராகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலக பி பிரிவு தலைமை உதவியாளர் சுந்தர ராகவன் தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் நில எடுப்பு தனி தாசில்தாராகவும், சாத்தான்குளம் தலைமையிடத்து துணை தாசில்தார் அனிதா, திருச்செந்தூர் இஸ்ரோ அலகு-1 நிலஎடுப்பு தனி தாசில்தாராகவும், ஏரல் தலைமையிடத்து துணை தாசில்தார் சங்கரநாராயணன் திருச்செந்தூர் இஸ்ரோ அலகு -5 நில எடுப்பு தனி தாசில்தாராகவும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அலுவலக தலைமை உதவியாளர் ஜானகி தூத்துக்குடி சிப்காட் அலகு - 8 அல்லிகுளம் திட்டப்பணிகள் நில எடுப்பு தனி தாசில்தாராகவும், தூத்துக்குடி கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தார் ஆனந்த் திருச்செந்தூர் இஸ்ரோ நிலஎடுப்பு அலகு-6 தனி தாசில்தாராகவும், ஓட்டப்பிடாரம் வட்ட வழங்கல் அலுவலர் சுடலைமணி தூத்துக்குடி நெடுஞ்சாலை பணிகள் நில எடுப்பு தனி தாசில்தாராகவும், கோவில்பட்டி தலைமையிடத்து துணை தாசில்தார் சுபா கோவில்பட்டி- மணியாச்சி ரயில்வே அலகு-1 நில எடுப்பு தனி தாசில்தாராகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

Tags

Next Story