வேட்பாளருக்கு எதிராக பிரசாரம் - வி.சி.க. பிரமுகர் இடைநீக்கம்

வேட்பாளருக்கு எதிராக பிரசாரம் -  வி.சி.க. பிரமுகர் இடைநீக்கம்

பெரியார்

மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரசாரம் செய்த விழுப்புரம் தொகுதி செயலாளர் தமிழ்மாறனை கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பெரியார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் பெரியார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரால் ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட விழுப்புரம் தொகுதி செயலாளர் தமிழ்மாறன், வருத்தம் தெரிவித்தபின் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். தற் போது நடந்து முடிந்த விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தலில் கட்சி தலைமைக்கும், வேட்பாளருக்கும் எதிராக பொதுமக்களிடம் அவதூறாக கருத்தை பரப்பி பானை சின்னத்திற்கு வாக்களிக்கக்கூடாது என்று வெளிப்படையாக கூறி கட்சிக்கு எதிராக செயல்பட்டது அறியப்பட்டது. அதன் அடிப்படை யில் கட்சிக்கும், தலைமைக்கும், வேட்பாளருக்கும் எதிராக செயல்பட்ட விழுப்புரம் தொகுதி செயலாளர் தமிழ்மாறன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட் டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story