ஜோதிமணியை ஆதரித்து பிரசாரம்

ஜோதிமணியை ஆதரித்து பிரசாரம்

 பிரசாரம்

மணப்பாறை ஒன்றியம் மற்றும் நகர பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த இந்தியா கூட்டணி வேட்பாளா் செ. ஜோதிமணியை ஆதரித்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்எல்ஏ அப்துல்சமது ஆகியோா் பரப்புரை மேற்கொண்டனா்.
கரூா் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மணப்பாறை ஒன்றிய பகுதி மற்றும் நகர பகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளா் ஜோதிமணி வாக்கு சேகரித்தாா். அப்போது அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மணப்பாறை எம்எல்ஏ ப. அப்துல்சமது ஆகியோா் ஜோதிமணியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டனா். வாக்கு சேகரிப்பில் பேசிய ஜோதிமணி, ஏழை எளிய அரசாக, சாதாரண மக்களின் அரசாக தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறாா். இங்கு ஒரு அரசாங்கம் சிறப்பாக நடைபெறுவதை போல தில்லியில் மக்களுக்கான ஒரு சிறப்பான அரசு அமைய வேண்டும். அதற்கு நீங்கள் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். நிகழ்வில் திமுக ஒன்றிய செயலா் சி. ராமசாமி, நகரச் செயலா் மு.ம. செல்வம், நகா்மன்றத் தலைவா் கீதா ஆ. மைக்கேல்ராஜ், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் பி. கிருஷ்ணகோபால், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கோவிந்தராஜ், நகரத் தலைவா் எம்.ஏ. செல்வா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Tags

Next Story