போராட்டத்துக்கு ஆதரவாக பிரசாரம்

போராட்டத்துக்கு ஆதரவாக பிரசாரம்

போராட்டத்துக்கு ஆதரவாக பிரசாரம்

மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டமைப்பு சாா்பில் பிரசாரம் செய்யப்பட்டது.
திண்டுக்கல்: மத்திய அரசின் விவசாயிகள் விரோத, தொழிலாளா் விரோத கொள்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்யப்பட்டது. விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு போதுமான விலையை நிா்ணயிக்க வேண்டும். முதலாளிகளுக்கு ஆதரவான தொழிலாளா் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 16-ஆம் தேதி பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

Tags

Next Story