சொத்து பிரச்சனை - கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

சொத்து பிரச்சனை - கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

காவல் நிலையம் 

வேதாரண்யம் கரியாப்பட்டினம் அருகே சொத்து பிரச்சனையில் உறவினரை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரணியம் அடுத்த கரியாபட்டினம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கத்திரிப்புலம் பனையடி குத்தகை பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் சண்முகவேல் வயது 53 .இதே போல் கோட்டுச்சேரி மாரியம்மன் கோயில் தெரு பகுதியை முருகேசன் மகன் அறிவழகன் வயது 39 .சண்முகவேலுவும் அறிவழகனும் உறவினர்கள் ஆவர் இருவருக்கும் இடையே நீண்ட காலமாக சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது இந்த நிலையில் ஜனவரி 24 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு சண்முக வேல் வீட்டிற்கு வந்த அறிவழகன் மற்றும் அவரது நண்பரான கத்தரிப்புலம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த கருணாநிதி மகன் மகன் சரவணன் வயது 39 ஆகிய இருவரும் சேர்ந்து சண்முகவேலிடம் தகராறு செய்து அவரை ஆபாசமாக திட்டி கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளனர் இதில் காயமடைந்த சண்முகவேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இது தொடர்பாக சண்முகவேல் மனைவி தமிழரசி கரியா பட்டினம் காவல் நிலையத்தில் ஜனவரி 29 திங்கட்கிழமை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சரவணன் அறிவழகன் ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்

Tags

Next Story