குற்றாலத்தில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் - 3 பேர் கைது

குற்றாலத்தில் மசாஜ் சென்டரில்  பாலியல் தொழில் - 3 பேர் கைது

மரியம் ஜார்ஜ்

குற்றாலத்தில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் அதிக அளவில் இருக்கும் தங்கும் விடுதிகளில், பல்வேறு பகுதிகளிலிருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் தங்கி, குற்றால சீசனை ரசித்துச் செல்வது வழக்கம். ஆனால் தற்பொழுது சில காலமாகக் குற்றாலத்தில் சீசன் சரியான நிலையில் தொடங்காமல், வறட்சியான நிலை காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு குற்றாலம் புலியருவி பகுதியில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில், பாலியல் தொழில் நடைபெறுவதாகக் குற்றாலம் காவல் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பெயரில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அந்த தனியார் சொகுசு விடுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, விடுதியின் மேனஜர் கேரளாவைச் சேர்ந்த மரியம் ஜார்ஜ் என்பவரையும், பாலியல் தொழிலில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதுபோன்ற அதிரடி சோதனைகள் இன்னும் தொடர்ந்து நடைபெறும் என்று காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story