கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

 கெங்கவல்லி அருகேயுள்ள பகுதிகளில், விவசாய கிணற்றில் உள்ள மின்மோட்டார்கள் தொடர்ந்து திருடப்பட்டு தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கெங்கவல்லி அருகேயுள்ள பகுதிகளில், விவசாய கிணற்றில் உள்ள மின்மோட்டார்கள் தொடர்ந்து திருடப்பட்டு தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே வீரகனுார், இலுப்பநத்தம், வீ.ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில், விவசாய கிணற்றில் உள்ள மின்மோட்டார்கள் தொடர்ந்து திரு டப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக, வீரகனுார் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என, ஐ.ஜே.கே., மாவட்டசெயலர் செல்வக்குமார் தலைமையில் அக்கட்சியினர், விவசாயிகள், மக்கள், நேற்று வீரகனுார் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர்இதுகுறித்து செல்வகுமார் கூறுகையில், "வீரகனூர் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதியில், 2 மாதங்களில், 15க்கும் மேற்பட்டமின்மோட்டார்கள் திருடுபோனது. இதுகுறித்து, 'சிசி டிவி' வீடியோ பதிவுகளுடன் புகார் அளித்தும் போலீஸ் நடவடிக்கை இல்லை. திருடர்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுப்பதோடு, விவசாயிகளின் மின் மோட்டார்களை மீட்டு கொடுக்க வேண்டும்," என்றார்.

Tags

Next Story