குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளை கொட்டி தீ வைப்பதற்கு எதிர்ப்பு

ஓமலூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளை கொட்டி தீ வைப்பதற்கு எதிர்ப்பு
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள முத்துநாயக்கன்பட்டியை அடுத்த பச்சனம்பட்டி ஊராட்சி VAB சிட்டி என்ற இடத்தில் முத்துநாயக்கன்பட்டி மற்றும் பச்சனம்பட்டி ஆகிய 2ஊராட்சிகளில் சேரும் குப்பைகளை கொட்டி தீ வைத்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து வருவதால் குழந்தைகள் பெரியவர்கள் மூச்சு விட மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், அதை மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள் குப்பை கொட்ட வந்தவர்களை முற்றுகையிட்டு குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story