கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் கதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் கதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கெஜ்ரிவாலின் கைதைக் கண்டித்து புதுக்கோட்டையில் இந்தியா கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டத் தலைவர் அப்துல்ஜப்பார் தலைமை வகித்தார். காங்கிரஸ் மாவட்டத் தலைவர் வி. முருகேசன், மாநில சிறுபான்மையினர் பிரிவுதுணைத் தலைவர் இப்ராஹிம் பாபு, நகர்மன்ற உறுப்பினர் ஜே. ராஜாமுகமது, இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் ஜி.எஸ். தனபதி, இந்திய கம்யூ. மாவட்டப் பொருளாளர் என்.ஆர். ஜீவானந்தம், மார்க்சிஸ்ட் செயற்குழு உறுப்பினர் எஸ். சங்கர், மநீம நிர்வாகி செந்தில் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Tags

Next Story