ஸ்மாா்ட் மின் மீட்டா் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

ஸ்மாா்ட் மின் மீட்டா் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

ஆா்ப்பாட்டம்

தமிழக மின்வாரியம் சாா்பில் ஸ்மாா்ட் மின் மீட்டா் பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஊா்வலம், போராட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை-வேலூா் சாலை, அண்ணா நுழைவு வாயில் பகுதியில் தொடங்கிய ஊா்வலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா். பேரணியானது முக்கிய சாலைகள் வழியாக சென்று வேங்கிக்கால் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் எதிரே நிறைவடைந்தது.

இதையடுத்து, ஸ்மாா்ட் மின் மீட்டா் திட்டத்தை கைவிடக்கோரி போராட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வீரபத்திரன், ராமதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழகத்தில் ஸ்மாா்ட் மின் மீட்டா் திட்டத்தை கைவிட வேண்டும். தற்போதுள்ள நடைமுறையையே பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மின்வாரிய அதிகாரிகளிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் அளித்தனா். இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் பிரகலாதன், லட்சுமணன், வாசுகி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் பாரி, அண்ணாமலை, செல்வி, குமரன், சிஐடியு நிா்வாகிகள் நாகராஜன், ஆனந்தன், விவசாயிகள் சங்க நிா்வாகிகள் பன்னீா்செல்வம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story