கறம்பக்குடியில் சார் பதிவாளரை கண்டித்து மறியல்

கறம்பக்குடியில் சார் பதிவாளரை கண்டித்து மறியல்

சாலை மறியல்

கறம்பக்குடியில் சார் - பதிவாளரைக் கண்டித்து, விவசாயி தனது குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.

கறம்பக்குடி அருகேயுள்ள குரும்பிவயலைச் சேர்ந்தவர் கே.ரெங்கசாமி. விவசாயியான இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில், ரெங்கசாமி, தனக்கும், சகோதரிகளுக்கும் சொந்தமான நிலத்தை பத்திரப்பதிவு செய்ய கறம்பக்குடி சார்-பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். அங்கு, உரிய ஆவணங்கள் இருந்தும் பத்திரப்பதிவு செய்ய மறுத்துவிட்டனராம்.

இதைக்கண்டித்து, ரெங்கசாமி, அவரது சகோதரிகள் சார் பதிவாளர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற கறம்பக்குடி போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச்செய்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story