வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

ஆலங்குடியில் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக ஒரு தரப்பினர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா தொடர்பாக ஒரு தரப்பினர் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த நிலையில் 3 மணி நேரத்திற்கு மேலாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த 40க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு உண்டானது.

Tags

Next Story