ராசிபுரத்தில் திராவிட விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ராசிபுரத்தில் திராவிட விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஜாதி மறுப்பு காதல் இணையர்களுக்கு பாதுகாப்பு அளித்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஜாதி அமைப்பைச் சார்ந்த சமூக விரோதிகளை கண்டித்தும், இதுபோன்ற ஜாதி வெறி பிடித்த ரவுடிகளை, அவர்கள் நடத்தும் அமைப்புகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியும். நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் இராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் தி.வி.க நகரச் செயலாளர் பிடல் சேகுவேரா தலைமையில் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தை வழக்கறிஞர் வி. சி. க நெ.அய்யாசாமி துவக்கி வைத்தார். மேலும் தி. வி.க மாவட்ட தலைவர் மு.சாமிநாதன், , சி.பி.ஐ மாவட்ட துணைச் செயலாளர் T.N கிருஷ்ணசாமி, , வி. சி.க சேலம் & நாமக்கல் மண்டல துணைச் செயலாளர் வ.அரசன், தி. வி.க மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி, ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர்.

மேலும் தி.வி.க நகரத் தலைவர் அன்பரசன், வி. சி.க நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி துணைச் செயலாளர் கபிலன், சி. பி.ஐ நகரச் செயலாளர் மணிமாறன், வி. சி.க வணிகர் அணி, மாநில துணைச் செயலாளர் செங்குட்டுவன், அ.மா.தே.சம்மேளனம்மாவட்ட செயலாளர் மீனா, வி. சி.க வெண்ணந்தூர் பேரூர் செயலாளர் நடராஜன், தி.வி.க மல்ல சமுத்திரம் ஒன்றியப் பொறுப்பாளர் பெரியண்ணன், தி. வி.க நகர செயலாளர், திருச்செங்கோடு பூபதி, AIYF மாவட்டச் செயலாளர் மோகன்குமார், வி. சி.க வணிகர் அணி மாவட்டச் செயலாளர் காமராஜ், தி.க வெண்ணந்தூர் ஒன்றியத் தலைவர் செல்வகுமார், வி. சி.க பேரூர் செயலாளர் அரவிந்தன், சி பி.ஐ நகர துணைச் செயலாளர் சாதிக், , வி. சி.க வெண்ணந்தூர் ஒன்றிய பொருளாளர் செங்கோட்டுவேல், சி. பி.ஐ செயற்குழு உறுப்பினர் பயாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதியாக தி.வி.க நகர அமைப்பாளர் சுமதி மதிவதனி, நன்றியுரை ஆற்றினார்.

Tags

Next Story