நெடுஞ்சாலைத்துறைக்கு மரக்கன்றுகள் வழங்கி போராட்டம்

கொடைக்கானல் அருகே மூஞ்சிக்கல்லில் உள்ள நெடுஞ்சாலைதுறை சாலைகள் நடுவே மரம் வளர்க்க ஆலோசனை கூறி, நாற்றுகள் கொடுக்கும் போராட்டம் நடந்தது.

கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் மரக்கன்றுகள் வழங்கிய மனிதநேய மக்கள் கட்சியினர்.

மனிதநேய மக்கள்கட்சி கொடைக்கானல் நகரம் சார்பில் கொடைக்கானல் உட்கோட்டம் மூஞ்சிக்கல்லில் உள்ள நெடுஞ்சாலைதுறை சாலைகள் நடுவே மரம் வளர்க்க ஆலோசனை வழங்கி,நாற்றுகள் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மக்களுக்கு பயன்தரவேண்டிய சாலைகளை தரமில்லாத வகையில் போட்டு மக்களின் உயிரோடு விளையாடும் நெடுஞ்சாலை துறையின் அசட்டை போக்கை கண்டித்தும், சாலைகள் மரம்நடுவதற்கே தகுதியான வகையில் இருப்பதை உணரத்தும் வகையில், நெடுஞ்சாலை துறையினருக்கு நாற்றுகள் வழங்கபடும் போராட்டம் நடத்தப்பட்டு நெடுஞ்சாலைதுறை அலுவலகத்தில் மரக்கன்றுகள் தரப்பட்டது.

Tags

Next Story