வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரி தமுமுக ஆர்ப்பாட்டம்.

வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரி தமுமுக ஆர்ப்பாட்டம்.
குமரி கலெக்டர் அலுவலகம் முன்பு தமுமுக ஆர்ப்பாட்டம்
நிர்வாகியக்ள் பலர் கலந்து கொண்டு வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரி முழக்கங்கள் எழுப்பினர்
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை ஒட்டி வழிபாட்டுத்தலங்களை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடந்ததுகன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு குமரி மாவட்ட தமுமுக தலைவர் ஜிஸ்தி முகம்மது தலைமை வைத்தார். மாவட்ட செயலாளர்கள் நவாஸ்கான், அபூபக்கர் சித்திக், பொருளாளர் அக்பர், துணை நிர்வாகிகள் உவைஸ், பீர் முஹம்மது, பயாஸ், சபிக் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஒய் எம் ஜே மாநில செயலாளர் அப்துல் ரகுமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் அல் காலித், காங்கிரஸ் மாநகர தலைவர் நவீன் குமார, தலைமை செயற்குழு உறுப்பினர் காதர் மைதீன், ரியாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story