திருப்பத்தூரில் அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

திருப்பத்தூரில் அமமுக சார்பில் தமிழகத்தில் போதைப் பொருள் தடுக்க வலியுறுத்தியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஸ்டேட் வங்கி முன்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் ஞானசேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் போதைப்பொருள் தடுக்க வலியுறுத்தியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த நகர செயலாளர் அட்சய முருகன், மாநில வழக்கறிஞர் பொருளாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story