முன்பு வளரும் தமிழகம் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

முன்பு வளரும் தமிழகம் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

பைல் படம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்பு வளரும் தமிழகம் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வளரும் தமிழகம் கட்சி திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பரமன் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கடந்த ஜூன் மாதமே குருவை சாகுபடிக்கு தர வேண்டிய 140 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா அரசு உடனடியாக வழங்கின தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள ஒரு கால அடிப்படையில் ஆவண செய்ய வேண்டும் என்றும், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய இறப்புகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் உடனடியாக மது கடைகளில் மூடி பூரண மதுவிலக்கு வேண்டியும், கள்ளுக்கடைகளை திறந்து விவசாயிகளை காப்பாற்ற கோரியும், தென்னை மரத்தில் தேங்காயில் தொடரும் கொள்ளை நோயை கட்டுப்படுத்தியும் ஏழை எளிய விவசாய மக்களை காப்பாற்ற கோரியும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வளரும் தமிழகம் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Tags

Next Story