இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்


இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து ராசிபுரம் நகர, ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சனிக்கிழமை ஆர்பாட்டம் நடைபெற்றது. தாக்குதலை கண்டித்து ராசிபுரம் பழைய பஸ் நிலையம் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் கட்சியின் நகரச் செயலர் எஸ்.மணிமாறன் தலைமை வகித்தார்.

கட்சியின் மாவட்டத் துணைச்செயலர் டி.என்.கிருஷ்ணசாமி கண்டனை உரையாற்றினார். வெண்ணந்தூர் ஒன்றியச் செயலர் பி.ஆர்.செங்கோட்டுவேல், நகர திராவிடர் விடுதலைக்கழக செயலர் பிடல் சேகுவேரா, இந்திய மாதர் சம்மேளன மாவட்ட செயலர் எஸ்.மீனா, வழக்குரைஞர் சிபிஐ ராசிபுரம் ஒன்றிய பொறுப்பாளர் ஆர்.ராஜா, நகர குழு உறுப்பினர்கள் பையாஸ், ஏ.சி.ராஜா, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ராசிபுரம் ஒன்றிய செயலாளர் ஞானசெளந்தர்யா, மற்றும் மணி,கோமதி, சந்திரன் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர்.

Tags

Next Story