புதிய ஊதியம் வேண்டி ஆர்ப்பாட்டம்!

புதிய ஊதியம் வேண்டி ஆர்ப்பாட்டம்!

ஆர்ப்பாட்டம்

புதிய ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது: சங்க பணியாளர்களுக்கு 31-12-2021 உடன் ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் புதிய ஊதியம் வழங்க வேண்டும். பயிர் கடன் வழங்குவதற்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஒழுங்கு முறை விதிகளை ஏற்படுத்தியது போன்று சங்கங்கள் மூலம் வழங்கப்படும் அனைத்து கடன்களுக்கும் ஒரே மாதிரியான ஒழுங்கு முறை விதிகள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் போன்றவற்றை அமல்படுத்த வேண்டும். சங்கங்களில் நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் கணினி பணியாளர்கள், நகை மதிப்பினர் ஆகியோரை தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். பொது விநியோகத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பி.ஓ.எஸ்., எந்திரத்தில் 2ஜி சிம் கார்டை 4ஜி சிம் கார்ட் ஆக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story