PACL நிறுவனத்திடமிருந்து பணத்தை திரும்ப வழங்க கோரி போராட்டம்

PACL நிறுவனத்திடமிருந்து பணத்தை திரும்ப வழங்க கோரி போராட்டம்
PACL நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்ப வழங்க கோரி போராட்டம்
PACL நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்ப வழங்க கோரி போராட்டம் நடைபெற்றது.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு 1996ம் ஆண்டு முதல் PACL என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் நாடு முழுவதும் உள்ள பொதுமக்களிடம் 49 ம் ஆயிரம் கோடி முதலீடுகளை பெற்று உள்ளது.

மேலும் இந்த PACL நிறுவனம் தமிழகத்திலும் கிளைகளை உருவாக்கி சுமார் 10 ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடுகளை பெற்று உள்ளது. இந்த நிலையில் கடந்த 2014 ம் ஆண்டு PACL நிறுவனம் பொது மக்களிடம் முதலீடுகளை பெற உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

மேலும் மக்களிடம் பெறப்பட்ட முதலீடுகளை PACL நிறுவனம் உடனடியாக திரும்ப உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் PACL நிறுவனத்தில் முதலீடு செய்த பொதுமக்கள் சுமார் 100க்கு மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும் கடந்த ஏழு ஆண்டுகளாக முதலீடு வழங்காத PACL நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுத்து வேண்டும் எனவும் மேலும் முதலீடு செய்த பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தின் போது அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story