செங்கல்பட்டில் சிறார்கள் தற்கொலை செய்து கொள்ளவதாக கூறி போராட்டம்

செங்கல்பட்டில் சிறார்கள் தற்கொலை செய்து கொள்ளவதாக கூறி  போராட்டம்
சிறார்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி போராட்டம்
செங்கல்பட்டில் சிறார்கள் தற்கொலை செய்து கொள்ளவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 30-க்கும் அதிகமான சிறார்களை அடைத்து வைத்துள்ளனர். தற்போது இந்த சிறார்கள் செங்கல்பட்டு அரசு சிறப்பு இல்லத்தில் உள்ள பல்வேறு குற்ற வழக்குகளில் கைதான 9 சிறார்கள் பழைய கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவகின்றனர். அரசு சிறப்பு இல்லத்தில் உள்ள மாணவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்ப வேண்டியும் , அதே போல் சுதந்திரமாக விளையாட அனுமதிக்க கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறார்களை மீட்க செங்கல்பட்டு தீயனைப்புத்துறை வீரர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

Tags

Next Story