சட்ட ஒழுங்கு சீர்கேடு - அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

சட்ட ஒழுங்கு சீர்கேடு - அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம் 

செய்யாறில் அதிமுக சார்பில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் அதிமுக சார்பில் சட்ட ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் செய்யாறு வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தமிழக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் கே.வெங்கடேசன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் தமிழக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் அவலங்கள் குறித்து பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ஜாகிர் உசேன், டி.கே.பி மணி, ஏ.அருணகிரி, எஸ்.ரவிச்சந்திரன், ஜி.கோபால், இ.வெங்கடேசன், ஆலத்தூர் சுப்பராயன், ஏ.ஜனார்த்தனன், ஆர்.கே.மெய்யப்பன், என்.ரகு, டி.பி.துரை, ஜி.கோவிந்தராஜ், ராணி பெருமாள், ஏ.கே.எஸ்.அன்பழகன், வே.குணசீலன், எம்.மகேந்திரன், எம்‌.அரங்கநாதன், சி.துரை, செல்வராஜ், சுரேஷ்குமார், தணிகாசலம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நிர்வாகிகளும் ஆயிரக்கணக்கான அதிமுகவினரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story