திருப்பத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்பாட்டம்

திருப்பத்தூரில் பணிமனையின் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வியுற்றதன் காரணமாக தமிழக முழுவதும் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கௌதம் பேட்டை பகுதியில் விழுப்புரம் மற்றும் சேலம் கோட்டம் பணிமனை அமைந்துள்ளது. இந்த பனிமலையின் முன்பு 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ATP, CITU, TTSF, PMK, AITUC, அனைத்து ஓய்வு பெற்ற சங்கத்தினர், ஆகியோர் கலந்து கொண்டு இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருந்த போதும் எந்த நடவடிக்கை இல்லாத காரணத்தால் இன்று அனைத்து சங்க கூட்டமைப்பு பாமக மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை ஆதரவு சங்கங்களும் ஒன்றிணைந்து 6அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வன்னியர் சங்க மாநில செயலாளர் டிகே ராஜா பங்கேற்றார்.

Tags

Next Story