சிஐடியு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளரின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து சிஐடியு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளரின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து சிஐடியு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. வேடசந்தூர் கிளை மேலாளரின் தொழிற்சங்க பாகுபாட்டை சுட்டிக்காட்டியும், ஓடும் பேருந்திலிருந்து தொழிலாளர்களை இறக்கிவிடும் போக்கைக் கண்டித்தும், சிஐடியு சங்க பலகையில் வேடசந்தூர் கிளை மேலாளர் மற்றும் பொது மேலாளர் குறித்து எழுதியதற்காக சங்கத் தலைவர்களுள் ஒருவரான நாகவேலுக்கு பணியிட மாறுதல் வழங்கியதற்கு சிஐடியு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து சிஐடியு சார்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story