பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில், கள்ளக்குறிச்சி, மாவட்டத்தின் கள்ளச்சாராயம் கொடுத்து பலியான, சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர்பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் நேற்று பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில், கள்ளச்சாராயம் அருந்தி பலர் பலியானதால், தமிழ்நாட்டில் கள்ளச்சாராய பழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாவட்ட செயலாளருமான இளம்பை இரா, தமிழ்ச்செல்வன், தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் சபாநாயகர் வரகூர் அருணாச்சலம், நகரச் செயலாளர் பூபதி , பொருளாளர் பூவை. செழியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மருதராஜா, சந்திரகாசி, பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டனப் பேருரை ஆற்றினார்கள் இதனை, தொடர்ந்து தமிழகத்தில் கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து கண்டன கோஷமிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இந்நிகழ்ச்சியில் அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story