விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில்   கண்டன ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

சென்னையில் முதல்வரின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் கருப்பசாமி தலைமையில், மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத் தலைவர் ராஜகோபாலன் முன்னிலையில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் வளாகக் கிளை செயலாளர் சரவணன் செல்வம் கண்டன உரையாற்றினார். இதில் 60க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்

Tags

Next Story