செங்கல்பட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரசார்

தாலியைப் பற்றிய பிரதமர் மோடி பேசியதை கண்டித்து செங்கல்பட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலியை திருடி விடுவார்கள் என்பது போல் பேசி இருந்தார் இதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் படாளம் கூட்டு சாலையில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட மகிலா காங்கிரஸ் கட்சி தலைவி வேல்விழி தலைமையில் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டு மோடி அரசையும்,பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைக் கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வட்டாரத் தலைவர்கள் சத்தியசீலன் ஹரி பிரசாத் கருங்குழி பேரூர் தலைவர் ஜாவித் மாநில PCC சதீஷ்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உமா மகேஸ்வரி, செல்வி ,அஸ்வினி ,அம்சவல்லி, சரளா , உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story