விருதுநகரில் சிபிஎம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் சிபிஎம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சியினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சியினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்தும் தாக்குதல் நடத்திய அனைத்து நபர்களையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சியினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக சாதி மறுப்பு காதல் திருமணம் செய்த தம்பதிகளை கொலை வெறியோடு தேடிய ஜாதி ஆதிக்க கும்பல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை தாக்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் (சிபிஎம் ) அலுவலகம் தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் தாக்குதல் நடத்திய அனைத்து நபர்களையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே சிபிஎம் நகரச் செயலாளர் முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்ட முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்து விடாமல் தடுக்க 10-பத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story