திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்பாட்டம்

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் சாயகழிவுகளை கொட்டும் சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

பள்ளிபாளையம் பகுதியில் காவிரி ஆறு ஓடுகிறது. இந்நிலையில் பள்ளிபாளையத்தை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வரும் நிலையில், இரவு நேரத்தில் சாயக் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல், சாயச் சாலை உரிமையாளர்கள் நேரடியாக சாக்கடை வழியாக கழிவு நீரை திறந்து விடுகின்றனர். இதன் காரணமாக காவிரி நீர் மாசுபட்டு பொதுமக்கள் அந்த குடிநீரை குடிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மெத்தன போக்குடன் செயல்படுவதாக கூறி ,திராவிடர் விடுதலைக் கழகம் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம், ஆவத்தி பாளையம் பேருந்து நிறுத்த பகுதி அருகே நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story