வனப்பகுதியில் வீடுகளை இழந்தவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்

ஒகேனக்கல் வனப்பகுதியில் வனத்துறையால் வீடுகளை இழந்தவர்களுக்கு, அத்தியாவசிய உணவுப் பொருட்களை பென்னாகரம் எம்எல்ஏ., ஜி.கே. மணி வழங்கினார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றை ஒட்டியுள்ள வனப் பகுதியில் வனத்துறையினரால் வீடுகளை இடிக்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட கிருஷ்ணன் மற்றும் அங்கே உள்ள குடும்பத்தினரை அவரது இடத்தில் நேரில் சென்று சந்தித்து பென்னாகரம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவருமான ஜி கே மணி அரிசி, பருப்பு, எண்ணெய், போன்ற உணவுப் பொருட்கள் கொடுத்து ஆறுதல் தெரிவித்தார் மேலும் இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story