பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் குடிநீர் வழங்கும் முகாம்

பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் குடிநீர் வழங்கும் முகாம்

ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கல்  

மயிலம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மயிலம் அரசு சுகாதார நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.
தமிழக அரசு வெப்பம் தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தமுகாம் அமைத்து பொதுமக்களுக்கு ஓஆர்.எஸ். கரைசல் குடிநீர் வினியோகம் செய்ய அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் மயிலம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மயிலம் அரசு சுகாதார நிலையம் சார்பில் மயிலம் பஸ் நிறுத்தம் அருகே ஓ.ஆர்.எஸ். கரைசல் குடிநீர் வினியோகம் செய்யும் முகாம் நடந்தது. இதில் மயிலம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் ராஜீவ்மோகன் பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் குடி நீரை வழங்கி, தொடங்கி வைத்தார். முகாமில் மயிலம் வட் டார மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி, பாரத ஸ்டேட் வங்கி கள அலுவலர் சற்குணன், ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், சுகாதார மேற்பார்வையாளர் ரமணி, ஊராட்சிசெயலாளர் சங்கர் மற்றும் செவிலியர்கள், ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story