தீ விபத்தில் பாதித்தோருக்கு நிவாரண உதவி வழங்கல்

தீ விபத்தில் பாதித்தோருக்கு நிவாரண உதவி வழங்கல்

நிதியுதவி

கள்ளக்குறிச்சியில் தீ விபத்தில் பாதித்தோருக்கு நிவாரண உதவி வழங்கல்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த மடம் கிராமத்தைச் சேர்ந்த அம்மாசி மனைவி அய்யம்மாள், 50; இவரது கூரை வீடு மின் கசிவால் தீப்பிடித்து எரிந்த சேதமானது. மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு அரிசி, காய்கறி, சமையல் பாத்திரம், துணி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி நிதியுதவி அளித்தார். வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், வி.ஏ.ஓ., மணி கண்டன், ஊராட்சி தலைவர் சுரேஷ், வார்டு உறுப்பினர்கள் சின்னமணி, எழிலரசன், கேசவன், தி.மு.க., நிர்வாகி வெங்கடேசன் உடனிருந்தனர்.

Tags

Next Story