கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கல்

கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு 2022-2023க்கான சிறப்பு கல்வி உதவித்தொகையை மதுரை மாநகர காவல் ஆணையர் வழங்கினார்.

மதுரை மாநகரில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்கள் ஆகியோரின் கல்லூரியில் பயிலும் குழந்தைகளுக்கு 2022-2023க்கான சிறப்பு கல்வி உதவித்தொகையை மதுரை மாநகர காவல் ஆணையர் வழங்கினார்.

மதுரை மாநகரில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்களின் மாணவர்கள்134 பேருக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர். ஜெ. லோகநாதன் இ.கா.ப., 2022-2023 ஆண்டிற்கு தமிழ்நாடு காவலர் நிதியிலிருந்து (TNPBF) வழங்கப்படும் சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல் அதிகாரிகள், காவலர்கள் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story